நாளைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி, கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி யாழ் மாவட்டத்தில் ஏ.வி.வீதி கொழும்புத்துறை, கொழும்புத்துறை வீதி- நெளுக்குளம் வீதி, கொழும்புத்துறை வீதி சுவாமியார் சந்தி, மணியந்தோட்டம், பழைய பூங்கா வீதி, கொழும்புத்துறை வீதி சந்தி, பாசையூர், பாசையூர் ஈச்சமோட்டை வீதி, பெரிய கோயில், புங்கங்குளம் கொழும்புத்துறை வீதி சந்தி, உதயபுரம், மணியந்தோட்டம் ஐஸ் தொழிற்சாலை, […]

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம்கொலனி பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதன்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது சடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

நோர்வே நாட்டில் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். புலம் பெயர்ந்து நோர்வே நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் புற்று நோய் காரணமாக நேற்று காலை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த [வயது 40 ] என்ற இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர். ஆவார் இளம் வயதில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கோடீஸ்வரர்களுக்கு இளம் பெண்களை விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 21 வயதுடைய இளம் பெண்ணை 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய பேரம் பேசப்பட்டுள்ளது. பொலநறுவை பிரதேச சபைக்கான நிர்மாணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கோடீஸ்வர வர்த்தகருக்கு விற்பனை செய்வதற்கு முயன்ற போது சந்தேக நபர் […]

யாழ்ப்பாணம் மாநகரில் வர்த்தகர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 28 வயதுடைய வர்த்தகர் ஒருவர் வெட்டுக்காயத்துக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காசுக் கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த மோதல் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கனடாவில் நடந்த விபத்தில் தெல்லிப்பளையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கனடா, ஸ்கார்பாரோ, கிங்ஸ்டன் மற்றும் போர்ட் யூனியன் வீதிக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 23 வயதுடைய அஸ்வின் சந்திரராஜ் என்ற தெல்லிப்பளையை பூர்வீகமாக கொண்ட இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகனம் ஒன்றும் TTC பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து […]

கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் மருத்துவர் ஒருவருடைய 50 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் அதிகளவானோர் கலந்து கொண்டு நடப்பதாக பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி கனகபுரத்தில் மருத்துவர் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடம் நடைபெறுவதாகவும் நிகழ்வில் 20 இற்கும் மேற்பட்ட சுகாதாரத் தரப்பினர் உட்பட்ட பெருமளவானவர்கள் பங்குகொண்டிருப்பதாகவும் பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது. இதயைடுத்து சம்பவ இடத்திற்குள் நுழைந்துள்ள பொலிஸார் […]

கோண்டாவில் காளி கோவிலடியில் கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தந்தையும் மகனும் இணைந்து அவரின் தலை மற்றும் கழுத்தில் வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் மோகனராஜா ரஜீவன் (வயது-37) என்பவரே சம்பவத்தில் படுகாயமடைந்தார். சம்பவத்தையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் தாக்குதல் நடத்திய இருவரும் கைது செய்யப்பட்டனர். சம்பவம் […]

Today Political Cartoons of Sri Lanka