பியகமஇ கோனவல பிரதேசத்தில் உள்ள வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
வீட்டின் தலைவர் உட்பட 3பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று பியகம சுகாதார வைத்திய அதிகாரி சமப் பெரேரா தெரிவித்துள்ளார்.
கோனவல பிரதேசத்தில் வீட்டின் தலைவரான 51 வயதுடைய நபர் முதலாம் திகதி ராகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தலருடைய 71 வயது தந்தை கடந்த 4ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அவரது தாயாரான 69 வயதுடைய பெண் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீட்டில் மேலும் 4 பேர் PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.