நாடு முழவதும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் பயணத்தடையை மீறி நடமாடியவர்கள் கைகளை உயர்த்தியவாறு வீதியில் முட்டுக்காலில் அமர்த்தப்பட்டனர்.
இந்த சம்பவம் அம்பாறை – மருதமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் வெளியாகியிருக்கின்றது.
நாடு முழவதும் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் மருதமுனை பகுதியில் தேவையற்று வீதிகளில் நடமாடியவர்களை இராணுவத்தினர் தலைக்கு மேலே கைகளை தூக்கியவாறு முழங்காலில் இருக்க வைத்துள்ளனர்.
இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாட்டை ஒரு சிலர் பாராட்டி பதிவுகளை இட்டிருந்தாலும் சிலர் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர்.