தேவையற்று வீதிகளில் திரிந்தோருக்கு நடந்த தரமான சம்பவம்..!!

நாடு முழவதும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் பயணத்தடையை மீறி நடமாடியவர்கள் கைகளை உயர்த்தியவாறு வீதியில் முட்டுக்காலில் அமர்த்தப்பட்டனர்.

இந்த சம்பவம் அம்பாறை – மருதமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் வெளியாகியிருக்கின்றது.

நாடு முழவதும் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் மருதமுனை பகுதியில் தேவையற்று வீதிகளில் நடமாடியவர்களை இராணுவத்தினர் தலைக்கு மேலே கைகளை தூக்கியவாறு முழங்காலில் இருக்க வைத்துள்ளனர்.

இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாட்டை ஒரு சிலர் பாராட்டி பதிவுகளை இட்டிருந்தாலும் சிலர் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர்.

Next Post

பிறந்து 18 நாட்களேயான குழந்தை பலி; PCR பரிசோதனையில் கொரோனா..!!

Sat Jun 19 , 2021
Post Views: 570 மினுவாங்கொடை பகுதியில் பிறந்து 18 நாட்களேயான குழந்தை ஒன்று இருதய நோயால் உயிரிழந்துள்ளது. இதனையடுத்து, இந்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளையடுத்து குழந்தைக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்திய கொரோனா திரிபான டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் தெமட்டகொடை பகுதியில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் […]

Today Political Cartoons of Sri Lanka